சிறிலங்காவில் நேற்று மாத்திரம் 6 ஆயிரத்து 190 PCR பரிசோதனைகள்!

330 0

சிறிலங்காவில்கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளவர்களை அடையாளம் காணும் நோக்கில்,  நாடளாவிய ரீதியில் நேற்றைய தினம்(செவ்வாய்கிழமை) 6 ஆயிரத்து 190 PCR பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

கொரோனா பரவலைத் தடுப்பதற்கான தேசிய செயற்பாட்டு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே, இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கமைய, நாடளாவிய ரீதியில் இதுவரை மூன்று இலட்சத்து 42 ஆயிரத்து 342 PCR பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.