இயக்கச்சி தனிமைப்படுத்தல் நிலையத்தில் ஆறு பேருக்கு கொரோனா- மருத்துவர் த.சத்தியமூர்த்தி

245 0

இயக்கச்சி தனிமைப்படுத்தல் முகாமில் இருக்கும் ஆறு பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்று யாழ்.போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் மருத்துவர் த.சத்தியமூர்த்தி தெரிவித்தார்.

வடக்கு மாகாணத்தின் பல இடங்களிலிருந்தும் 320 பேருக்கு பி.சி.ஆர். பரிசோதனைகள் யாழ்.போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் நேற்று மேற்கொள்ளப்பட்டன என அவர் குறிப்பிட்டார்.

இதன்போது, இயக்கச்சி தனிமைப்படுத்தல் முகாமை சேர்ந்தவர்கள் 6 பேரைத் தவிர ஏனையோருக்கு தொற்று இல்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.