தைவான் தேசிய தின விளம்பரங்களை வெளியிட்ட இந்திய ஊடகங்களுக்கு மிரட்டல் விடுத்த சீனா – பதிலடி கொடுத்த தைவான்

274 0

தைவானின் தேசிய தின கொண்டாட்டங்கள் தொடர்பாக இந்திய செய்தி ஊடகங்களில் விளம்பரங்கள் வெளியானது. இதற்கு சீனா கண்டனம் தெரிவித்துள்ளது.

தைவான் நாடு தனது நாட்டின் ஒரு பகுதி என சீனா தொடர்ந்து உரிமை கோரி வருகிறது. தைவான் அதிபராக ட்சாய் ல்ங் 2016ம் ஆண்டு பதவியேற்ற பின்னர்
இவ்விவகாரத்தில் சீனாவின் அழுத்தம் அதிகரித்துள்ளது.
ஆனால், தைவானுக்கு அமெரிக்கா ராணுவ உதவிகளை மேற்கொண்டு சீனாவின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுவருகிறது.
லடாக் விவகாரத்தில் இந்தியா-சீனா இடையே மோதல் போக்கு அதிகரித்தது. இதனால், சீனாவுக்கு எதிரான நடவடிக்கைகளில் இந்தியாகளமிறங்கியுள்ளது.
இதற்கிடையில், சீனாவில் இருந்து ஜப்பானின் கட்டுப்பாட்டில் சென்ற தைவான் 1949 டிசம்பர் 10-ம் தேதி தனி நாடாக உருவானது. இந்த நாளை தேசிய நாளாக தைவான் கொண்டி வருகிறது.
இந்த ஆண்டுக்கான தைவானின் தேசிய நாள் நாளை கொண்டாடப்படுகிறது. இந்த கொண்டாடங்கள் மற்றும் தைவானின் விடுதலை தொடர்பான தகவகல்கள் அடங்கிய விளம்பரங்கள் இந்திய செய்தித்தாள்களிலும், செய்தி ஊடங்களிலும் வெளியிடப்பட்டன.
இந்திய செய்தி ஊடகங்கள் தைவான் தேசியநாள் கொண்டாட்ட தினத்தில் (செப்டம்பர் 10) சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தவும் திட்டமிட்டுள்ளன.
இந்நிலையில், இந்திய செய்தித்தாள்களில் தைவான் தேசியநாள் கொண்டாட்டங்கள் தொடர்பாக வெளியான விளம்பரங்களுக்கு சீனா கண்டனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக டெல்லியில் உள்ள சீன தூதரகம் வெளியிட்ட அறிக்கையில்,’ உலகத்தில் ஒரே ஒரு சீனா மட்டுமே உள்ளது. கம்யூனிஸ்ட் ஆட்சி நடைபெறும் சீனாதான் ஒட்டுமொத்த சீனாவையும் உள்ளடங்கிய அரசாங்கம் என்பதை ஊடக நண்பர்களுக்கு  தெரிவித்துக்கொள்கிறோம்.
குறிப்பாக, தைவான் ஒரு தனிநாடாகவோ அல்லது சீன குடியரசாகவோ அல்லது சீனாவின் தைவான் மாகாணத்தில் உள்ள தலைவர்களை
அதிபர்களாகவோ மேற்கொள்காட்டக்கூடாது. இது பொதுமக்களுக்கு தவறான கருத்து மற்றும் செய்தியை கொண்டு சேர்க்கும்’ என மிரட்டல் விடுத்துள்ளது.
இந்த அறிக்கை, தைவான் தேசியநாள் கொண்டாட்ட விளம்பரங்கள் வெளியிட்ட இந்தியாவின் பிரபல செய்தி ஊடகங்கள் அனைத்திற்கும் இ-மெயில் மூலமாகவும் அனுப்பப்பட்டுள்ளது.
இதற்கிடையில், இந்திய ஊடகங்களை எச்சரிக்கும் வகையில் அறிக்கை வெளியிட்டிருந்த சீனாவிற்கு தைவான் வெளியுறவுத்துறை மந்திரி ஜோசப் வு கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து ஜோசப் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ‘சுதந்திரத்தை விரும்பும் மக்களையும், துடிப்பான ஊடகத்துறையையும் கொண்ட உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு இந்தியா.
ஆனால் கம்யூனிஸ்ட் சீனா தணிக்கை விதித்து இந்திய துணைக் கண்டத்திற்குள் அணிவகுத்துச் செல்ல விரும்புகிறது. இதற்கு தைவானின் இந்திய நண்பர்கள் ஒரு பதில் வைத்துள்ளனர். தொலைந்து போ! (சீனா)’ என தெரிவித்துள்ளார்.