ஹத்ராஸ் வன்கொடுமை: திமுக மகளிரணி நாளை பேரணி- முக ஸ்டாலின் அறிவிப்பு

199 0

உ.பி. ஹத்ராவில் இளம்பெண் வன்கொடுமையை கண்டித்து நாளை கனிமொழி தலைமையில் திமுக மகளிரணி ஆளுநர் மாளிகை நோக்கி பேரணி செல்கிறது என்று முக ஸ்டாலின் கூறியுள்ளார்.

திமுக தலைவர் முக ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

உத்தர பிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் தலித் சமூகத்தைச் சேர்ந்த 19 வயது இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டார்.

இந்த சம்பவத்தைக் கண்டித்தும், ஹத்ராஸ் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நீதி வழங்கக் கோரி கனிமொழி எம்பி தலைமையில் நாளை மாலை திமுக மகளிரணி ஆளுநர் மாளிகை நோக்கி பேரணி செல்கிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.