சிறிலங்காவில் அனைத்து அரச உற்பத்தி நிறுவனங்களினதும், விற்பனை நிலையங்களை ஒரே இடத்தில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
அமைச்சர் பந்துல குணவர்த்தன இதுகுறித்த தகவல்களை வெளியிட்டுள்ளார்.
அனைத்து அரச உற்பத்தி நிறுவனங்களினதும், பொருட்களை ஒரே இடத்தில் பொதுமக்கள் கொள்வனவு செய்யும் வகையிலேயே குறித்த திட்டம் வகுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
முதல் மையம் நரஹன்பிட்ட பொருளாதார மையத்தில் அமைக்கப்படவுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.