ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் மூலம் தமிழகத்தில் ரேஷன் பொருட்கள் தடையின்றி கிடைக்கும் என்று அமைச்சர் காமராஜ் கூறினார்.
சென்னையில் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் கூறியதாவது:
ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் மூலம் தமிழகத்தில் ரேஷன் பொருட்கள் தடையின்றி கிடைக்கும். ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டத்திற்கு கூடுதல் விதிகளுடன் 5% பொருட்களை கூடுதலாக விநியோகிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் எங்கு வசித்தாலும் ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் மூலம் பொருட்களை பெற்றுக் கொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.