நல்லாட்சி அரசாங்கத்தில் பாதுகாப்பு தொடர்பான அனைத்து அதிகாரங்களும் சிறிசேனவிடமேயிருந்தன -ருவான்

264 0

நல்லாட்சி அரசாங்கத்தில் பாதுகாப்பு தொடர்பான அனைத்து அதிகாரங்களும் ஜனாதிபதியிடமே காணப்பட்டது என முன்னாள் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜயவர்த்தன தெரிவித்துள்ளார்.

உயிர்த்தஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணை ஆணைக்குழுவின் முன்னிலையில் சாட்சியமளித்த பின்னர் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவிக்கையில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

முன்னையஅரசாங்கத்தின் காலத்தில் நான் பாதுகாப்பு விவகாரங்களுக்கானஅமைச்சராக பணியாற்றிய போதிலும் முழு அதிகாரமும் ஜனாதிபதியிடமே காணப்பட்டது என அவர் தெரிவித்துள்ளார்.

பொலிஸ்முப்படையினர் புலனாய்வு பிரிவினர் தொடர்பான அதிகாரங்கள் என்னிடம் இருக்கவில்லை என அவர்தெரிவித்துள்ளார்.

இதன்காரணமாக நாட்டின் பாதுகாப்பு தொடர்பில் நானே இரண்டாவது நிலையிலிருந்தேன் என என்னால் தெரிவிக்க முடியாது,என அவர் குறிப்பிட்டுள்ளார்.