அங்கீகாரமற்ற துப்பாக்கி வைத்திருந்த மூன்று தமிழ் இளைஞர்கள் கனடாவில் கைது

293 0

அங்கீகாரமற்ற வகையில் துப்பாக்கி வைத்திருந்த மூன்று தமிழர்கள் கனடாவில் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டனர்.

Whitby நகரில் Durham பிராந்திய காவல்துறையினரின் நடவடிக்கை ஒன்றில் இந்தக் கைதுகள் மேற்கொள்ளப்பட்டன. கடந்த செவ்வாய்க்கிழமை பின்னிரவு 11:30 மணியளவில் வாகனம் ஒன்றை நிறுத்திய காவல்துறையினர் அங்கீகாரமற்ற வகையில் துப்பாக்கி வைத்திருந்த மூன்று தமிழர்களை கைது செய்துள்ளனர்.

பிரதீப் பத்மநாதன் 39, சஜீத் செல்வாநாதன் 27, கஜன் அப்பாத்துரை 39 ஆகியோரே கைது செய்யப்பட்டுள்ளனர்.