கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் மேலும் ஒருவருக்கு கொரோனா !

436 0

நாட்டில் நேற்று காலை 10 மணி முதல் இன்று காலை வரை கொரோனா தொற்றாளர்கள் 13 பேர் அடையாளம் காணப் பட்டதாகச் சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது.

குவைட்டிலிருந்து வருகை தந்த 7 பேர், சவூதி அரேபியாவி லிருந்து வருகை தந்த இருவர், ஐக்கிய அரபு இராச்சியத்தி லிருந்து வந்த இருவர், இந்தியாவிலிருந்து வருகை தந்த ஒருவர் மற்றும் கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்பட்ட கைதி ஒருவருக்கும் இவ்வாறு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள தாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர் களின் எண்ணிக்கை 3ஆயிரத்து 312 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, கொரோனா தொற்றுக்குள்ளாகி பூரண மாகக் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3ஆயிரத்து 108 ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில், இலங்கையில் கொரோனாவில் உயிரிழந்த வர்களின் எண்ணிக்கை 13 ஆக அதிகரித்துள்ளமை குறிப் பிடத்தக்கது.