இளவாலை வடக்கில் வெடிபொருட்கள் சில கண்டுபிடிப்பு

262 0

இளவாலை வடக்கில் தோட்டக் காணி ஒன்றை உழவு செய்யும் போது, நிலத்துக்குள் புதைத்து வைக்கப்பட்டிருந்த வெடிபொருட்கள் சில கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று (22) இந்த வெடிபொருள்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில், அவை தொடர்பில் ஆராயப்பட்டன.

தமிழீழ விடுதலைப் புலிகளினுடைய வெடிபொருள்களே பொதி செய்யப்பட்டு புதைத்து வைக்கப்பட்டிருக்கலாம் என நம்பப்படுவதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.