கம்பேர்க் தமிழாலயத்தில் நடைபெற்ற லெப். கேணல் திலீபன் அவர்களின் நினைவேந்தல் நிகழ்வு.

795 0

லெப். கேணல் திலீபன் அவர்களின் நினைவேந்தல் நிகழ்வு கம்பேர்க் நகரில் கம்பேர்க் தமிழாலயத்தில் தமிழ் இளையோர் அமைப்பால் 19.09.2020 இன்று நடைபெற்றது. ஆரம்ப நிகழ்வாக திலீபனின் திருஉருவப்படத்திற்கு சுடர்வணக்கம், மாலை அணிவித்து, மலர்வணக்கம் நடைபெற்று அதனைத் தொடர்ந்து
அகவணக்கம் நிகழ்த்தப்பட்டது.

இதில் கம்பேர்க், கம்பேர்க் 1 தமிழாலய பெற்றோர்கள், ஆசிரியர்கள், நிர்வாகத்தினர், மாணவர்கள், முன் நாள் மாணவர்கள், கம்பேர்க் நகர மக்கள் ஆகியோர் கலந்து கொண்டு சுடர்வணக்கம், மலர் வணக்கம் செய்தனர்.

மாவீரர் திலீபனின் வாழ்க்கை வரலாறு, அவரது ஐந்து கோரிக்கைகள், பன்னிரண்டு நாட்கள் நடந்த நிகழ்வுகளையும் அவருடைய உடல்நிலை பற்றிய அனைத்துத் தகவல்களும் யேர்மன் மொழியிலும் தமிழ் மொழியிலும் எழுதி காட்சிப்படுத்தப்பட்டு மாணவர்களுக்கு விளக்கம் கொடுக்கப்பட்டது.