யேர்மனி பென்ஸ்கைம் தமிழாலயம் நடாத்திய மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டி

629 0

கொரோனோத் தொற்றுநோய்ப் பரவற் சூழலானது உலகை முடக்கிப்போட்டுவிட்டு நகர மனிதர்களும் மனங்களுள் சுருங்கிப் புழுங்கிக் கழித்துகொண்டிருந்த வேளையிற் தமிழ்க் கல்விக் கழகத்தின் நிர்வாகத்தின் கீழியங்கும பென்ஸ்கைம் தமிழாலயம் மாணவர்களின் உடல் உள நலன்பேணும் நோக்கிலே 12.09.2020ஆம் நாளன்று கொரோனோ தொற்றுநோய்ப் பரவற் கட்டுப்பாடுகளைக் கடைப்பிடித்தவாறு மெய்வல்லுனர்ப போட்டியை நடாத்தியது.

யேர்மன் தேசியக் கொடி, தமிழீழ தேசியக் கொடி, மற்றும் தமிழாலயக்கொடி ஏற்றிவைக்கப்பட்டதைத் தொடர்ந்து போட்டி நடைபெற்றது. பென்ஸ்கைம் தமிழாலயத்தின் அழைப்பையேற்றுத் தென்மேற்கு மாநிலத் தமிழாலயங்களின்
பெற்றோர்கள் மாணவர்கள் தேசியச் செயற்பாட்டாளர்கள் மற்றும் அனைவரது பங்களிப்போடும் ஒத்துழைப்போடும் சிறப்பாக நடைபெற்றது.

கொரோனோத் தொற்றுநோய்ப் பரவற் சூழலானது உலகை முடக்கிப்போட்டுவிட்டு நகர மனிதர்களும் மனங்களுள் சுருங்கிப் புழுங்கிக் கழித்துகொண்டிருந்த வேளையிற் தமிழ்க் கல்விக் கழகத்தின் நிர்வாகத்தின் கீழியங்கும பென்ஸ்கைம் தமிழாலயம் மாணவர்களின் உடல் உள நலன்பேணும் நோக்கிலே 12.09.2020ஆம் நாளன்று கொரோனோ தொற்றுநோய்ப் பரவற் கட்டுப்பாடுகளைக் கடைப்பிடித்தவாறு மெய்வல்லுனர்ப போட்டியை நடாத்தியது.

யேர்மன் தேசியக் கொடி, தமிழீழ தேசியக் கொடி, மற்றும் தமிழாலயக்கொடி ஏற்றிவைக்கப்பட்டதைத் தொடர்ந்து போட்டி நடைபெற்றது. பென்ஸ்கைம் தமிழாலயத்தின் அழைப்பையேற்றுத் தென்மேற்கு மாநிலத் தமிழாலயங்களின்
பெற்றோர்கள் மாணவர்கள் தேசியச் செயற்பாட்டாளர்கள் மற்றும் அனைவரது பங்களிப்போடும் ஒத்துழைப்போடும் சிறப்பாக நடைபெற்றது.