யேர்மனி டுசில்டோர்ப் நகரமத்தியில் நடைபெற்ற தியாக தீபம் லெப்.கேணல் திலீபன் அவர்களின் ஐந்தாவது நாள் நினைவுகூரல்.

991 0

தியாகதீபம் லெப்.கேணல் திலீபன் அவர்களுக்கு தாயகத்தில் மக்கள் வணக்கம் செலுத்துவதற்கு சிறிலங்கா இனவாத அரசாங்கம் தடைவிதித்துள்ள நிலையை புலம்பெயர்ந்து வாழும் தமிழ்மக்கள் தாங்கள் வாழும் நாடுகளில் வீதியில் இறங்கி செயற்படவேண்டிய தருணமாக இக்காலகட்டம் இருக்கின்றது.

தன் இனத்திற்காக உயிர் நீத்தவர்களுக்கு மலர்தூவி விளக்கேற்றுவதற்கான சாதாரண மனித உரிமையைக் கூட சிறிலங்கா அரசாங்கம் கொடுமையான சட்டங்களைப் பாவித்து தடுத்துள்ளமை சர்வாதிகாரப் போக்கு என்பதனை உலகமக்களுக்கு எடுத்தியம்ப வேண்டியவர்களாக நாம் இருக்கின்றோம்.

ஆந்த வகையில் இன்று 19.9.2020 சனிக்கிழமை யேர்மனி டுசில்டோர்ப் நகரமத்தியில்; கொரோனா நோயின் விதிகளுக்குட்பட்டு இந் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.

நாளை இவ் நிகழ்வு யேர்மனி வூப்பெற்றால் நகரமத்தியில் நடைபெறயிருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.