எதிர்வரும் செவ்வாய்ககிழமை கூடவுள்ள கோப் குழு..!

196 0

புதிய நாடாளுமன்றத்தில் பொது நிறுவனங்கள் தொடர்பான நாடாளுமன்ற தெரிவுக்குழுவான கோப் குழு எதிர்வரும் செவ்வாய்ககிழமை முதன்முறையாக கூடவுள்ளது.

இந்த கூட்டம் நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை பிற்பகல் நடைபெறவுள்ளதாக நாடாளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அன்றைய தினம், கோப் குழுவின் உறுப்பினர்களால் அதன் தலைவரை தெரிவு செய்வதற்கு எதிர்ப்பார்த்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் அரச கணக்குகளுக்கான நாடாளுமன்ற தெரிவுக்குழுவான கோபா குழு எதிர்வரும் புதன்கிழமை கூடவுள்ளது.

அன்றைய தினம் அதன்தலைவரை தெரிவு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் நாடாளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

கோப் குழு மற்றும் கோபா குழுவிலும் 22 நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கியுள்ளனர். பொது நிறுவனங்கள் மற்றும் அரசாங்கத்திற்கு சொந்தமான பிற நிறுவனங்களின் நிதி செயல்திறனை கண்காணிப்பதற்கு கோப் குழுவிற்கு அதிகாரம் உள்ளது.

அதேநேரம் அரசாங்க அமைச்சுகள், திணைக்களங்கள்;, மாகாண சபைகள், உள்ளூராட்சி மன்றங்களின் முகாமைத்துவ திறன் மற்றும் நிதி ஒழுக்கத்தை ஆராய்வது கோபா குழுவின் கடமையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.