தமிழக மீனவர்கள் தொடர்பில் வலியுறுத்தல்

505 0

1453101251-2005இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுகின்றமைக்கு நிரந்தர தீர்வு காணுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.
பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் இந்த வலியுறுத்தலை விடுத்துள்ளார்.
ராமேஸ்வரம் பகுதியிலிருந்து வங்கக்கடலில் மீன்பிடிக்கச் சென்ற தமிழக மீனவர்கள் 5 பேரை இலங்கைக் கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
அவர்கள் சென்ற படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
தமிழக மீனவர்களுக்கு எதிரான இலங்கைப் படையினரின் இந்த அத்துமீறல் கண்டிக்கத்தக்கதென அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 34 நாட்களில் 34 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

Leave a comment