நினைவேந்தலை நினைவுகூர தடை

243 0

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட மந்துவில் சந்தை வளாகத்தில் நடத்தப்பட்ட குண்டு தாக்குதலில் படுகொலை செய்யப்பட்ட 22 அப்பாவி பொதுமக்களுடைய 21ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வை நடத்துவதற்கு, புதுக்குடியிருப்பு பொலிஸார் தடைவிதித்துள்ளதாக, நினைவேந்தல் ஏற்பாட்டுக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இதற்கு நீதிமன்ற தடை உத்தரவையும், பொலிஸார் பெற்றுள்ளனர்.

இருப்பினும், இத்தடையையும் மீறி, மந்துவில் பகுதியில் படுகொலை செய்யப்பட்ட மக்களுக்கு சுடர் ஏற்றி வணக்கம் செலுத்தவுள்ளதாக, உயிரிழந்தவர்களின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.