யாழ்ப்பாணம் கொக்குவிலில் ஹெரோயின் போதைப் பொருளுடன் ஒருவர் கைது!

293 0

யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியில் ஹெரோயின் விற்பனையில் ஈடுபட்டு வந்தார் என்ற குற்றச்சாட்டில் இளைஞர் ஒருவர் விசேட அதிரடிப் படையினரால் நேற்று(3) இரவு கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடமிருந்து 13 கையடக்கத் தொலைபேசிகள், தராசு மற்றும் 1,530 மில்லிகிராம் ஹெரோயினும் மீட்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

யாழ்ப்பாணம் கொக்குவில் கிழக்கு பகுதியில் ஹெரோயின் வியாபாரம் இடம்பெற்று வருவதாக விசேட அதிரடிப் படையினருக்கு இரகசிய தகவல் கிடைத்துள்ளது. அவ்வாறு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் கொக்குவில் பகுதியில் மேற்கொண்ட சுற்றிவளைப்பு தேடுதலின் போது வீதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் நடமாடிய இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.