கொரோனா தடுப்பு பணிகள்- திருவாரூரில் முதலமைச்சர் ஆய்வு

338 0

திருவாரூர் மாவட்ட வளர்ச்சி பணிகள், கொரோனா தடுப்பு பணிகள் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார்.

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தமிழகம் முழுவதும் மாவட்டம் வாரியாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு கொரோனா தடுப்பு பணி மற்றும் மாவட்டத்தில் நடந்து வரும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து ஆய்வு நடத்தி வருகிறார்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று திருவாரூர் மாவட்டத்தில் 781 பயனாளிகளுக்கு ரூ.5.52 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

முடிவடைந்த ரூ.11.50 கோடி திட்டங்களை தொடங்கி வைத்து, ரூ.22.60 கோடி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.

திருவாரூர் மாவட்ட வளர்ச்சி பணிகள், கொரோனா தடுப்பு பணிகள் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார்.