தீயில் எரிந்த இருவர் யாழில் பலி

239 0

முல்லைத்தீவு – முள்ளியவளை பகுதியில், 21ம் திகதியன்று தீக்காயங்களுக்குள்ளான குடும்பஸ்தர் யாழ்ப்பாணப் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி இன்று (26) உயிரிழந்துள்ளார்.

இரண்டு பிள்ளைகளின் தந்தையான 30 வயதுடைய செய்யது முகமது சிராஜ் என்பவரே, இவ்வாறு உயிரிழந்தவராவார்.

வீடொன்றுக்குச் சென்று பால் காய்ச்சும் போது மேல் தட்டில் இருந்த மண்ணெண்ணை போத்தல் தவறுதலாக அடுப்பு மீது விழுந்ததில் ஏற்பட்ட தீ விபத்தில் இவர் படுகாயமடைந்திருந்தார்.

இதேவேளை, சகோதரன் திட்டியதால் தனக்குத்தானே தீ மூட்டிய குடும்பப் பெண் ஒருவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று (26) உயிரிழந்துள்ளார்.

கோண்டாவில் பகுதியைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தாயான ரஜுவ்காந்த் நந்தினி தேவி (வயது 45) என்பவரே, இவ்வாறு உயிரிழந்தவராவர்.