நீட் மற்றும் ஜே.இ.இ. தேர்வுகளை ஒத்திவைக்க உச்ச நீதிமன்றத்தை நாட வேண்டும் என மு.க. ஸ்டாலின் ஆந்திரா உள்பட நான்கு மாநில முதல்வர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
மாணவர்களின் நலன் கருதி நீட் மற்றும் ஜே.இ.இ. தேர்வுகளை ஒத்திவைக்க கோரி ஏழு மாநில முதலமைச்சர்கள் உச்சநீதிமன்றத்தை நாடுவதைப் போல ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா, கேரளா மற்றும் ஒடிசா ஆகிய மாநில முதலமைச்சர்களும் உச்சநீதிமன்றத்தை நாட வேண்டும் எனக் கோரி அம்மாநில முதலமைச்சர்களுக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
அவர் எழுதியுள்ள கடிதத்தின் விவரம் வருமாறு:-
தாங்கள் நலமாகவும், நல்ல உடல்நலத்துடனும் இருப்பீர்கள் என நம்புகிறேன். தேசியத் தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (NEET) மற்றும் கூட்டு நுழைவுத் தேர்வு (JEE) 2020 எழுதும் மாணவர்கள் எதிர்கொள்ளும் சிரமங்களை உங்கள் கவனத்திற்குக் கொண்டுவருவதற்காகவே நான் இந்தக் கடிதத்தை எழுதுகிறேன்.