நேற்று காலை 10.00 மணி முதல் இன்று காலை வரை நாட்டில் மேலும் 13 கொரோனா நோய் தொற்றாளர்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அவர்கள் அனைவரும் வெளிநாட்டிலிருந்து வருகை தந்த வர்கள் என்றும் இவர்கள் தனிமைப்படுத்தல் நிலையங் களில் தங்கியிருந்த நிலையில் கொரோனா தொற்று நோய்க்குள்ளாவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நாட்டில் கொரோனா நோய்த்தொற்றுகளின் எண்ணிக் கை 2984 ஆக உயர்ந்துள்ளது.
இதற்கிடையில், இந்தியாவில் வைரஸ் வேகமாக பரவு வதால், இலங்கையிலும் கொரோனாவுக்கு அதிக ஆபத் தில் உள்ளது என தொற்றுநோய் தடுப்பு பிரிவின் விசேட வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்தார்.
இந்தியாவிலிருந்து படகுகள் மூலம் இலங்கைக்குள் சட்ட விரோதமாக நுழைபவர்களை உடனடியாக நிறுத்த வேண்டும் அவ்வாறு செய்ய தவறும் பட்சத்தில் இலங் கைக்கு வைரஸ் பரவக்கூடும் என அவர் தெரிவித்தார்.
கொரோனா வைரஸ் தொடர்ந்து உலகம் முழுவதும் பரவு வதால் இலங்கை இன்னும் முழுமையாக வைரஸிலிருந்து விடுபட வில்லை என அவர் மேலும் தெரிவித்தார்.

