யாழ். மாநகர சபை, நல்லூர்ப் பிரதேச சபை மற்றும் கோப்பாய் பிரதேச சபைகளுக்கு உட்பட்ட பகுதிகளில் வீதிப்போக்குவரத்து நடைமுறை உள்ள முக்கியமான சந்திகளில் முதற் கட்டமாக 14 சி.சி.ரி.வி. கமெராக்களைப் பொருத்துவதற்கு நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக யாழ். மாநகர முதல்வர் இம்மானுவேல் ஆனல்ட் தெரிவித்துள்ளார்.
யாழ். மாநகர சபையின் மாதாந்த அமர்வு நேற்று செவ்வாய்க்கிழமை யாழ். மாநகர சபையின் முதல்வர் இம்மானுவேல் ஆனல்ட் தலைமையில் இடம்பெற்றது. இந்த அமர்வில் வீதி விபத்துக்களைக் குறைப்பதற்கான நடவடிக்கை தொடர்பில் கலந்துரையாடப்பட்டபோதே மாநகர முதல்வர் இவ்வாறு கூறினார்.
அண்மைய காலப் பகுதியில் யாழ். குடாநாட்டில் முக்கியமான சந்திகளில் வீதி விபத்துக்கள் இடம்பெற்று வருகின்றன. இதனை கட்டுப்படுத்தும் முகமாக வீதிப்போக்குவரத்துப் பொலிஸாரின் ஆலொசனையின் பேரில் இந்த நடவடிகை முன்னெடுக்கப்படவுள்ளதாக முதல்வர் குறிப்பிட்டார்.

