விக்னேஸ்வரனின் நாடாளுமன்ற முதல்நாள் உரை ஹன்சாட்டில் சேர்க்கப்பட்டுள்ளது

370 0

சர்ச்சையை ஏற்படுத்திய தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவரும் யாழ். மாவட்ட எம்.பியுமான சி.வி.விக்னேஸ்வரனின் நாடாளுமன்ற முதல்நாள் உரை ஹன்சாட்டில் சேர்க்கப்பட்டுள்ளது.

உலகில் உயிர்வாழும் மூத்த மொழிகளில் ஒன்றும், இந்நாட்டின் முதல் சுதேச குடிமக்களின் மொழியிலும் வாழ்த்துக்களை தெரிவிப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் கடந்த 20 ஆம் திகதி சாபநாயகர் தெரிவின் பின்னர் உரையாற்றினார்.

இதனை அடுத்து சி.வி.விக்னேஸ்வரனின் உரையை ஹன்சாட்டில் இருந்து நீக்குமாறு ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்கார கோரிக்கை விடுத்திருந்தார். அரச தரப்பினரும் இதேபோன்ற கோரிக்கையை முன்வைத்திருந்தனர்.

இது குறித்து ஆராய்வதாக குறித்த தினமே சபாநாயகர் மஹிந்த யப்பா அபேவர்தன தெரிவித்திருந்தபோதும் விக்னேஸ்வரனின் உரையின் விபரம் ஹன்சாட்டில் சேர்க்கப்பட்டுள்ளது