குருநாகல் நகர முதல்வர் உள்ளிட்டோரை கைதுசெய்ய இடைக்காலத் தடை!

302 0

குருநாகல் நகரசபை முதல்வர் உள்ளிட்ட ஐவரை கைதுசெய்ய இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

குருநாகல், புவனேகபாகு மன்னரின் அரசவை தகர்க்கப்பட்டமை தொடர்பாக நீதிமன்றினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள குருநாகல் நகரசபை முதல்வர் உள்ளிட்ட ஐவரையும் எதிர்வரும் ஓகஸ்ட் 24ஆம் திகதிவரை கைதுசெய்வதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.

புவனேகபாகு மன்னரின் அரசவை தகர்க்கப்பட்டமை குறித்த விசாரணைகள் இடம்பெற்றுவரும் நிலையில், இதுதொடர்பாக குருநாகல் நகர முதல்வர் துஷார சஞ்ஜீவ விதாரணவுடன் மேலும் நால்வருக்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், தம்மை கைதுசெய்யுமாறு நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்டுள்ள பிடியாணையை இரத்துச் செய்யுமாறு கோரி, குருநாகல் நகர முதல்வரால் மேன்முறையீட்டு நீதிமன்றில் நீதிப் பேராணை மனுவை தாக்கல் செய்திருந்தார். இந்நிலையிலேயே, குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.