தமிழகத்தில் பாஜக தலைமையிலான கூட்டணிதான் சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் என்று பாஜக மாநில துணைத்தலைவர் வி.பி.துரைசாமி கூறி உள்ளார்.
சென்னையில் உள்ள கமலாலயத்தில் பாஜக மாநில துணைத்தலைவர் வி.பி.துரைசாமி பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
தமிழகத்தில் பாஜக தலைமையிலான கூட்டணிதான் சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளும். பாஜவை எந்த கட்சி அனுசரித்து போகிறதோ அந்த கட்சியுடனே கூட்டணி அமைக்கப்படும்.
மத்தியில் ஆட்சியில் இருப்பதால் பாஜக தலைமையில்தான் கூட்டணிக் கட்சிகள் தேர்தலை சந்திக்கும். தமிழகத்தில் திமுக vs அதிமுக என இருந்த நிலை திமுக vs பாஜக என மாறி உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
அதிமுக தலைமையில் கூட்டணி வைத்து பாஜக போட்டியிட்ட நிலையில் வி.பி.துரைசாமி கருத்து சலசலப்பையும் அதிருப்தியையும் ஏற்படுத்தி உள்ளது.