நிதி நகர வேலைத்திட்டத்தின் மூலம் மீனவ சமூகத்திற்குப் பாதிப்பில்லை

326 0

downloadநிதி நகர வேலைத்திட்டத்தின் மூலம் மீனவ சமூகத்திற்கு பாதிப்புக்கள் ஏற்படப்போவதில்லை என்று மீன்பிடி மற்றும் நீர்வள அபிவிருத்தி அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

கம்பஹாவில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு ஒன்றில் கருத்து தெரிவித்த அமைச்சர் மஹிந்த அமரவீர, நிதி நகர வேலைத்திட்டத்தின் மூலம் மீனவ சமூகம் பாதிக்கப்படாது என்று கூறினார்.

நிதி நகர வேலைத் திட்டத்திற்கான மண் பெற்றுக் கொள்வதன் காரணமாக மீனவர்களுக்கு ஏற்படுகின்ற பாதிப்புக்களுக்காக நட்டஈடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.