வாழ்த்துக்களால் நிறைந்த தியாக தீப முன்றல்

419 0

இலங்கைப் பாராளுமன்ற தேர்தலில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி யாழ் மாவட்டத்தில் வெற்றி பெற்றமையினை முன்னிட்டு இன்று காலை 11 மணிக்கு அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றது

நல்லூர் பின் வீதியில் அமைந்துள்ள தியாகி திலீபன் தூபியில் இடம்பெற்ற நிகழ்வில் கஜேந்திர குமார் பொன்னம்பலம் செல்வராஜா கஜேந்திரன் ஆகியோருக்கு கட்சி ஆதரவாளர்கள் மலர்க் கொத்து வழங்கி தங்கள் வாழ்த்தையும் அன்பையும் பரிமாறிக்கொண்டனர்.

மேலும் வேட்பாளர்களாக. போட்டியிட்ட க.சுகாஷ், திருமதி வாசுகி சுதாகர், க.காண்டீபன், டிலான் பத்மநாதன், ஆகியோருடன் கட்சி ஆதரவாளர்களும் செயற்பிட்டாளர்களும் பங்குபற்றியமை குறிப்பிடத்தக்கது.