நடராஜா ரவிராஜ் கொலை – கருணாவின் தொடர்பு அம்பலம்

286 0

f72c1d4660ecb6d8cdb7daabb0c9d23cகருணா தரப்பினரின் வேண்டுகோளுக்கு அமைய முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் கொலை சம்பவத்தில் தாம் பங்கேற்றதாக காவல்துறை அதிகாரி ஒருவர் உறுதிப்படுத்தியுள்ளார்.

ரவிராஜ் கொலை தொடர்பான வழக்கு விசாரணை கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இடம்பெற்றது.

இதன்போது, அரச தரப்பு சாட்சியாக பீரிதிவிராஜ் மனம்பேரி என்ற காவல்துறை அதிகாரி சாட்சியம் அளித்தார்.

அரச தரப்பு சாட்சியான இவருக்கு விசேட பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் மற்றும் அவரது மெய்பாதுகாவலரை கொலை செய்வதற்காக கிரித்தலை இராணுவ முகாமில் இருந்து ஆயுதம் விநியோகிக்கப்பட்டிருந்தது.

பிரதி மன்றாடியார் நாயகம் ரொஹான் அபயசூரிய கடந்த வழக்கு விசாரணையின் போது ஆயுதம் வழங்கப்பட்டதனை உறுதிப்படுத்தியிருந்தார்.

இந்த வழக்கு தொடர்பான விசாரணைகள் எதிர்வரும் 28ஆம் திகதி நடைபெறும் என நீதிமன்றம் அறிவித்துள்ளது.