தெல்லிப்பளை வைத்தியசாலையில் ஒரே சூலில் மூன்று குழந்தைகள் பிரசவிப்பு

299 0

யாழ்ப்பாணம் – தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் நேற்று (30) ஒரே சூலில் உருவான மூன்று குழந்தைகள் சத்திர சிகிச்சை மூலம் பிரசவிக்கப்பட்டுள்ளன.

சாவகச்சேரி பகுதியினைச் சேர்ந்த திருமதி சுகந்தன் என்ற ஆசிரியை ஒருவருக்கே இவ்வாறு மூன்று குழந்தைகள் கிடைக்கபெற்றுள்ளன. இரண்டு ஆண் குழந்தைகளும் ஒரு பெண் குழந்தையும் இவ்வாறு ஒரே சூலில் கிடைக்கபெற்றுள்ளது.

பெண்ணியல் வைத்திய நிபுணர் என்.சரவணபவன் மற்றும் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையின் குழந்தை வைத்திய நிபுணர் எஸ்.ஜெயபாலன் ஆகியோரின் முயற்சியினால் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் இந்த குழந்தைகள் சத்திரசிகிச்சை மூலம் பிரசவிக்கப்பட்டுள்ளன.