யாழ்.பல்கலையில் மாவீரர் நினைவேந்தல் (படங்கள் இணைப்பு)

309 0

cyf2sixuaaautjkமாவீரர் நாளை முன்னிட்டு யாழ்.பல்கலைக்கழகத்தில் நினைவுச்சுடர் ஏற்றப்பட்டு அகவணக்கம் செலுத்தப்பட்டதுடன், மாவீரர்களை நினைவு கூறும் வகையில் மரங்களும் நாட்டப்பட்டது.
சர்வதேச நாடுகளில் மாவீரர் வாரம் மிகவும் உணர்வு பூர்வமாக அனுஸ்ரிக்கப்பட்டு வருகின்றது. நாளை மறுதினம் மாவீரர் வாரத்தின் இறுதி நாளில் தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்காக தமது உயிர்களை தியாகம் செய்த அனைத்து மாவீரர்களுக்குமான அஞ்சலியினை செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
இதன்படி யாழ்.பல்கலைக்கழகத்திலும் மாணவர்களினாலும், விரிவுரையாளர்கள், ஆசிரியர்கள், ஊழியர்கள் அனைவரும் இணைந்து மாவீரர் நினைவேந்தலை இன்று வெள்ளிக்கிழமை நடத்தியுள்ளனர்.
யாழ்.பல்கலைக்கழகத்திற்குள் உள்ள கைலாசபதி கலையரங்கில் ஒன்று கூடிய அவர்கள் தமது கைகளில் தீபங்களை ஏற்றி வைத்து மாவீரர்களுக்கான அஞ்சலியினை செலுத்தியதுடன், பல்கலைக்கழக வாளத்திற்கு மாவீரர்களின் நினைவாக மரங்களையும் நாட்டிவைத்தனர்.

cyf80ahuaaatdv cyfy4iyukaa4aqp cyfy4nauuaaord7 cygd0hyvqaata01 img_5631 img_5632 img_5637 img_5641