யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் புதிய துணை வேந்தரிற்கான தேர்வு எதிர்வரும் 12 ஆம் திகதி

238 0

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் புதிய துணை வேந்தரிற்கான தேர்வு எதிர்வரும் 12 ஆம் திகதி பல்கலைக்கழகத்தில் இடம்பெறவுள்ளது.

யாழ்ப்பாணம் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் பதவிக்காக விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது. ஆறு பேர் விண்ணப்பத்திருந்தனர். இவ்வாறு விண்ணப்பித்தவர்களில் இருந்தே ஒருவரை துணை வேந்தராகத் தேர்வு செய்ய வேண்டும்.

இதற்காக யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் பேரவையில் உள்ளோர் வாக்களித்து தேர்வு

செய்யும் முறைமை எதிர்வரும் 12 ஆம் திகதி இடம்பெறவுள்ளது. அதனை நடத்துவதற்காக மதிப்பீட்டாளர்கள் என நால்வர் பல்கலைக் கழக மானியங்கள் ஆணைக்குழுவில் இருந்து வருகை தரவுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.