சிறிலங்காவில் போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது

323 0

சிறிலங்காவில் கல்கிஸ்ஸ பொலிஸ் பிரிவின் படோவிட பிரதேசத்தில் 305 போதை மாத்திரைகளுடன் நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

28 வயதுடைய கல்கிஸ்ஸ பிரதேசத்தை சேர்ந்த நபரொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேநகபர் இன்று (25) கல்கிஸ்ஸ நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ள நிலையில் கல்கிஸ்ஸ பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.