மட்டு மற்றும் காத்தான்குடி வாவிகளில் இறந்த நிலையில் கரையொதுங்கிய புதிய வகைப்பாம்புகள்(காணொளி)

366 0

batti-snakeமட்டக்களப்பு மற்றும் காத்தான்குடி வாவிகளில் ஒரு வகையான பாம்புகள் கடந்த இரண்டு தினங்களாக பெருமளவில் இறந்த நிலையில் கரையொதுங்குவதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

மட்டக்களப்பு மற்றும் காத்தான்குடி வாவிகளில், முக்குலியான் எனப்படும் பாம்புகளே காணப்படுவதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த பாம்புகளினால் மீன் பிடிப்பதற்கு சிரமங்களை எதிர் நோக்குவதாகவும் மீனவர்கள் குறிப்பிடுகின்றனர்.

ஒரு அடியிலிருந்து இரண்டரை அடி நீளமான பாம்புகளே இவ்வாறு காணப்படுவதாகவும், இந்த பாம்புகள் இறந்த நிலையிலும் கரையொதுங்கி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக கருத்து தெரிவித்த மீன் பிடி திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட உதவி பணிப்பாளர் றுக்ஸான் குறூஸ், கால நிலை மாற்றத்தினால் மழை காலம் ஆரம்பித்துள்ள நிலையில் இந்த பாம்புகள் வருவதாக கூறியதுடன்,இது தொடர்பாக அவதானித்து வருவதாகவும் தெரிவித்தார்.