நல்லூர் உற்சவம் ஆரம்பமாகின்றது; 300 பக்தர்களையாவது அனுமதிக்குமாறு கோரிக்கை

258 0

நல்லூர் கந்தசுவாமி கோயில் திருவிழாவில் 300 பக்தர்களையேனும் ஆலய வளாகத்துக்குள் அனுமதிக்க வேண்டும் என்று கேட்டு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு யாழ். மாநகர பதில் முதல்வர் து. ஈசன் கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.

வரலாற்றுப் பிரசித்தி பெற்ற நல்லூர் கந்தசுவாமி கோயிலின் வருடாந்தப் பெருந்திருவிழா எதிர்வரும் 24 ஆம் திகதி ஆரம்பமாகிறது. வழக்கமாக பல்லாயிரக்கணக்கானவர்கள் பங்கேற்கும் இந்தத் திருவிழாவில் இம்முறை அதிகம் பேர் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஆலய ஊழியர்கள், இந்துக் குருமாருடன் திருவிழாவை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

நயினாதீவு, மடு தேவாலய திருவிழாக்களில் அதிகபட்சம் 300 பக்தர்களை பங்கேற்க அனுமதிக்கப்பட்டது. நல்லூர் ஆலய வளாகத்திலும் 300 பக்தர்களையேனும் பங்கேற்க அனுமதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்தக் கடிதத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.