காணி அபகரிப்பு முயற்சி தடுக்கப்பட்டது!

257 0

மன்னார் – நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட இராச மடுக் கிராமத்தில் அரச காணி, கோவில் காணி, இந்தியாவில் உள்ள சிலரின் காணிகள் என சுமார் 49 ஏக்கர் காணிகளை துப்பரவு செய்து வேலியிடும் நடவடிக்கையில் நபர் ஒருவர் நேற்று முன் தினத்தில் (13) இருந்து ஈடுபட்டுவந்துள்ளார்.

குறித்த நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து நானாட்டான் ஸ்ரீசெல்வ முத்து மாரியம்மன் ஆலய நிர்வாகத்தினரும், பொது மக்களும் இணைந்து மன்னார் உதவித் தேர்தல் ஆணையாளரிடம் முறைப்பாடு செய்தனர்.

குறித்த முறைப்பாட்டிற்கு அமைவாக மன்னார் உதவித்தேர்தல் ஆணையாளர் ஜெ.ஜெனிற்றன் அவர்களின் பணிப்பில் மன்னார் தேர்தல் முறைப்பாட்டுக்குழு அதிகாரி ஏ.டி.பி.றொகான் தலைமையிலான குழுவினர் நேற்று (14) பொலிசாருடன் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று மக்களுடன் கலந்துரையாடினர்.

இதன் போது தேர்தல் காலத்தில் முரண்பாடுகளை தவிர்துக் கொள்வதற்காக அரச, கோவில் காணிகளை வேலியிடும் செயற்பாடுகளுக்கு தடைவிதித்தனர்.