கொரோனா பரவல் குறித்து தவறான தகவல்களை பரப்புவோருக்கு எச்சரிக்கை

372 0

கொரோனா தொற்று தொடர்பாக தவறான தகவல்களை பரப்புவோர் குறித்து முறையான விசாரணைகளை முன்னெடுக்குமாறு அதிகாரிகளுக்கு அரசாங்கம் அறிவித்துள்ளது.

தனிமைப்படுத்தலில் உள்ளோரை கொரோனா தொற்றுக்குள்ளானவர்கள் என உண்மைக்குப் புறம்பான தகவல்களை பரப்புவதற்கான சில முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் நாலக களுவெவ தெரிவித்துள்ளார்.

இந்நிலையிலேயே இவ்வாறு தவறான தகவல்களை பரப்புவோர் குறித்து முறையான விசாரணைகளை முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

கந்தகாடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில், சமூகத்தில் கொரோனா வைரஸ் பரவாமல் இருப்பதற்கு அரசாங்கத்தினால் உரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக நாலக களுவெவ தெரிவித்துள்ளார்.

இதனடிப்படையில், கொரோனா தொற்றுக்குள்ளானோர் மற்றும் அவர்களோடு தொடர்புகளைப் பேணியவர்களை அடையாளம் காணல் மற்றும் தனிமைப்படுத்தல் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.