தமிழ் மக்களை இனவாதத்தோடு பார்ப்பவர்களுக்கு அரசாங்கம் பதிலடி கொடுக்க வேண்டும்- வடிவேல் சுரேஸ்

265 0

இலங்கை என்பது பல்லின மக்கள் செறிந்து வாழ்கின்ற ஓர் நாடு. இந்நாட்டில் அனைவரும் ஒற்றுமையுடனேயே வாழ்கின்றனர். இந்நிலையில் ஒரு சில பௌத்த மதகுருமார்கள் இனவாதத்தை தூண்ட முயற்சிக்கின்றனர் இதற்கு அரசாங்கம் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பதுளை மாவட்ட பாராளுமன்ற வேட்பாளர் வடிவேல் சுரேஸ் தெரிவித்துள்ளார்.

மேலும், ஒரு சில மதகுருமார்கள் இனவாதத்தை தூண்டும் வகையில் தமிழர்களின் வரலாற்றை மாற்றியமைக்க முயற்சிக்கின்றனர். இது முற்றிலும் தவறானது.

அயல் நாடுகள் நம்மை பார்த்து வியக்கும் வண்ணம் நம் ஒற்றுமையை காட்ட வேண்டும். இப்படி இனவாதத்தையும் மதவாதத்தையும் காட்ட கூடாது.

இனவாதத்தை தூண்ட முயற்சிப்பவர்களை பொறுப்பான அரசாங்கம் என்ற வகையில் கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.