பொத்துவில் பகுதியில் தேர்தல் வன்முறை- பெண் உட்பட 4 பேர் படுகாயம்

244 0

பொத்துவில் பிரதேசத்தில் தேர்தல் வன்முறை சம்பவமொன்று பதிவாகியுள்ளது. இதில் பெண் உட்பட நான்கு பேர் படுகாயமடைந்துள்ளனர்.

குறித்த பகுதியில் பொதுத்தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சியின் ஆதரவாளர்கள், நேற்று (வியாழக்கிழமை)  இரவு தாக்கப்பட்டுள்ளனர்.

இதில் ஒரு பெண் உள்ளடங்களாக 4 பேர் காயமடைந்த நிலையில் பொத்துவில் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை கடந்த மூன்று தினங்களுக்கு முன்னர் கபே அமைப்பு, பொத்துவில் பகுதியில் வன்முறை அதிகரிக்கலாம் எனவும்  பாதுகாப்பை அதிகரிக்க கூறியும் தேர்தல் ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.