சிறிலங்காவில் டிரான் அலஸ் உள்ளிட்ட 4 பேர் விடுவிப்பு

223 0
சிறிலங்காவில் ´ராதா´ நிறுவனத்தின் முன்னாள் தலைவர் டிரான் அலஸ் உள்ளிட்ட 4 பிரதிவாதிகளை அனைத்து குற்றச்சாட்டுக்களில் இருந்தும் விடுவிப்பதாக கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (10) உத்தரவிட்டது.

2006 ஆம் ஆண்டில் வடமாகாணத்தில் ஆழிப் பேரலை அனர்த்தம் காரணமாக வீடுகள் மற்றும் சொத்துக்களை இழந்தவர்களுக்காக வீடமைப்பு திட்டம் ஒன்று செயற்படுத்தப்பட்ட போது 124 மில்லியன் ரூபாய் அரச நிதியை மோசடி செய்ததாக இவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.