மின்கட்டணத்தினை பல மாதங்களுக்கு முன்னரே அரசாங்கம்குறைத்திருக்கவேண்டும்

308 0

மார்ச் ஏப்பிரல் மே மாதத்திற்கான மின்கட்டணங்களுக்கு அரசாங்கம் வழங்க முன்வந்துள்ள சலுகையை வரவேற்றுள்ள ஐக்கியதேசிய கட்சி எனினும் சில மாதங்களுக்கு முன்னரே தாங்கள் இந்த யோசனையை முன்வைத்திருந்ததாக தெரிவித்துள்ளது.

ஐக்கியதேசிய கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகருணாநாயக்க இதனை தெரிவித்துள்ளார்.

ஆரசாஙகம் மின்கட்டணங்களை குறைப்பதற்கான யோசனையை முன்வைப்பதற்கு முன்னரே ஐக்கியதேசிய கட்சி இந்த யோசனையை முன்வைத்தது என அவர் தெரிவித்துள்ளார்.

முடக்கல் நிலையின் அரசாங்கத்தின் உயர்மட்டத்தினை நாங்கள் சந்தித்தவேளை இந்த யோசனையை நாங்கள் முன்வைத்திருந்தோம் என அவர் தெரிவித்துள்ளார்.

எனினும் அரசாங்கம் வழங்குவதாக அறிவித்துள்ள இந்த சலுகை மக்களுக்கு சிறந்தது என ரவிகருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை ஒரு யுனிட் மின்கட்டணத்தினை பல மாதங்களுக்கு முன்னரே அரசாங்கம்குறைத்திருக்கவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.