சிறிலங்காவில் முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் 10 மணித்தியாலங்கள் வாக்குமூலம் வழங்கிய பின்னர் அங்கிருந்து வெளியேறியுள்ளார்.
ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் இன்று (வியாழக்கிழமை) முற்பகல் 11 மணியளவில் முன்னிலையாகியிருந்தார்.
ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பிலான விசாரணைகளுக்காக குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு வருகைதருமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில் முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் இன்று முன்னிலையாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.