சிறிலங்காவில் போதைப்பொருள் ஒழிப்பு பணியகத்தின் மற்றுமொரு அதிகாரி கைது

251 0

சிறிலங்காவில் போதைப்பொருள் வர்த்தகர்களுடன் தொடர்பில் இருந்த சந்தேகத்தின் பேரில் 17 ஆவது சந்தேகநபர் ராகம பகுதியில் வைத்து குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

போதைப்பொருள் ஒழிப்பு பணியகத்தின் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்தார்.