அரசியல் ரீதியான பேச்சுவார்த்தைகளின் மூலம் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு பெற்றுக்கொள்ள முடியாது – சீ.வி.விக்னேஸ்வரன் (காணொளி)

323 0

 

c-m-voiceதமிழ் மக்களின் பிரச்சினைக்கு, சிங்கள மக்களோடு கலந்துரையாடியே தீர்வினைக்காண முடியும் என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில், கொழும்பு இலங்கை மன்றக் கல்லூரியில் நடாத்தப்பட்ட “வடக்கு – தெற்கு உரையாடலில் கருத்து வெளியிட்டபோதே, வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் இவ்வாறு தெரிவித்தார்.

அரசியல் ரீதியான பேச்சுவார்த்தைகளின் மூலம்; தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு பெற்றுக்கொள்ள முடியாது எனத் தெரிவித்துள்ள வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் சிங்கள மக்களோடு கலந்துரையாடி தீர்வினை பெற்றுக்கொள்ள முடியுமென தான் நம்புவதாகவும் இதன்போது சுட்டிக்காட்டினார்.

அத்துடன், யுத்தம் முடிவடைந்து  7  வருடங்கள் ஆகிவிட்ட நிலையில், படையினரை வட பகுதியில் இருந்து அகற்றிவிட்டு பாதுகாப்பு கடமைகளில் பொலிஸாரை ஈடுபடுத்தலாம் என்றும் வடக்கு மாகாண முதலமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.