கூட்டமைப்பை வெளியேற்றுவதே சர்வதேச விசாரணைக்கான சாவியாக அமையும்

385 0

கூட்டமைப்பை வெளியேற்றுவதே சர்வதேச விசாரணைக்கான சாவியாக அமையும். என்று வவுனியாவில் கடந்த 1236 வது நாளாக போராட்டம் மேற்கொள்ளும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தெரிவித்தனர்.

வவுனியாவில் இன்றையதினம் அவர்களால் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர்கள் இவ்வாறு தெரிவித்தனர்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்கள்,

புதிய அரசியல் சாசனத்தை அதாவது அடிமை சாசனத்தை கொண்டுவருவதற்காகவே. தமிழர்களை பலவீனப்படுத்தி அரசியல் ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் கொழும்பின் நிகழ்ச்சிநிரலில் சிந்திக்கவிடாமல் அடிமை வாக்களார்களாக கடந்த 11 வருடங்களாக கூட்டமைப்பு வைத்திருந்ததாக பெருமை கொள்கின்றது.

தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலையை நிராகரித்த சம்பந்தன் சுமந்திரன் குழுவினர்களை மக்கள் ; நிச்சயம் நிராகரிப்பார்கள். கூட்டமைப்பை வெளியேற்றுவதே சர்வதேச விசாரணைக்கான சாவியாக அமையும். இதை எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் நிறைவேற்றவேண்டும். என்று தெரிவித்தனர்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் உடையதும் பிரித்தானியாவின் உடையதும் கொடிகளையும் ஏந்தியவாறும் ஒரு நாளைக்கு ஒரு நேர உணவுத்தவிப்பு தொடர்கிறது என்ற வாசகம் தாங்கிய பதாதையுடன் போராட்டம் மேற்கொண்டிருந்தார்கள்.