புதுக்குடியிருப்பில் மனித எச்சங்கள் ; அகழ்வுப் பணிகள் நீதிமன்ற அனுமதியுடன் இன்று நடைபெறும்

250 0

முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு, சுதந்திரபுரம் பகுதியில் தனியார் ஒருவரின் காணியில், மனித எலும்பு எச்சங்கள் இனங்காணப்பட் டுள்ளன.

இதையடுத்து, இன்று நீதிமன்றத்தின் அனுமதியுடன், அப்பகுதியில் அகழ்வுப்பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

நாற்பது ஏக்கர் கொண்ட இக்காணியை, நேற்று முன் தினம் கனரக இயந்திரத்தைக் கொண்டு துப்புரவுசெய்யும்போது, மனித எலும்பு எச்சங்கள் புதைந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.