வலி.வடக்கில் விடுவித்த பகுதியில் மிதிவெடி அபாயம் (படங்கள் இணைப்பு)

301 0

15181455_1031891656921708_7495737666074923244_nவலி.வடக்கில் இருந்து மக்களுடைய மீள்குடியேற்றத்திற்காக அண்மையில் விடுவிக்கப்பட்ட தையிட்டி கிழக்குப் பகுதியில் இருந்து மிதிவெடிகள் மற்றும் வெடிக்காத வெடிபொருட்களும் இனங்காணப்பட்டுள்ளது.
குறித்த பகுதியில் கடந்த 26 வருடமாக நிலை கொண்டிருந்த இராணுவத்தினர் அங்கு இருந்த மக்களுடைய வீடுகளில் முகாங்களை அமைத்து தங்கியிருந்தனர்.
இவ்வாறு தங்கியிருந்த இராணுவத்தினர் தமது முகாங்களில் பாதுகாப்பிற்காக மிதிவெடிகளை மண்ணுக்குள் புதைத்து வைத்துள்ளனர்.
இருப்பினும் குறித்த பகுதிகள் விடுவிக்கப்பட்ட பின்னர் அங்கிருந்து சென்ற இராணுவத்தினர் மண்ணுக்குள் புதைத்த மிதிவெடிகளை அகற்றாமல் அங்கேயே விட்டுவிட்டுச் சென்றுள்ளனர். மேலும் வெடிக்காத வெடிபொருட்களையும் இராணுவத்தினர் பொறுப்பற்ற விதத்தில் அங்கேயே விட்டுவிட்டுச் சென்றுள்ளனர்.
இராணுவத்தின் பொறுப்பற்ற இச் செயலினால் அங்கு மீள்குடியேறிக் கொள்ளும் பொது மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

15094953_1031891686921705_5729786152837363492_n 15179183_1031891763588364_8535449039629768948_n 15181428_1031891723588368_8963775922408802524_n