வவுனியாவில் இரு கடைகளில் திருட்டு (காணொளி)

359 0

sequence-01-still008வவுனியா பிரதான பேரூந்து தரிப்பிடத்தில் உள்ள நகரசபைக்கு சொந்தமான இரு கடைகள் உடைக்கப்பட்டு திருட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இன்று காலை குறித்த கடையை திறப்பதற்காக அதன் உரிமையாளர்கள் சென்றபோது கடை உடைக்கப்பட்டு திருட்டப்பட்டிருந்தமை தெரியவந்தது.

இதனையடுத்து கடை உரிமையாளர்களால் வவுனியா பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டதையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த பொலிசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

பேரூந்து தரிப்பிடத்தில் உள்ள நகரசபைக் கட்டடத்தொகுதியின் மேல்மாடியில் அமைந்திருந்த இறுவெட்டு கடை ஒன்றின் முன்கதவின் இரண்டு பூட்டுக்களும் அலவாங்கால் உடைத்து திருடர்கள் அங்கிருந்த பொருட்களை கொள்ளையடித்துள்ளனர்.

குறித்த உடைக்கப்பட்ட இறுவட்டு கடையிலிருந்து பீடிகள், கடை உடைப்பதற்கு பயன்படுத்தப்பட்ட அலவாங்கு என்பன மீட்கப்பட்டுள்ளது.

அதே கட்டடத் தொகுதியில் கீழ்த்தளத்தில் அமைந்துள்ள புடவைக்கடை ஒன்றும் அதன் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு அங்கு இருந்த பொருட்கள் திருடப்பட்டுள்ளன.

இவ்விரு கடைகளும் உடைக்கப்பட்டு திருடப்பட்ட கட்டத்தொகுதியில் நகரசபையின் காவலாளி கடமையில் இருந்தமை குறிப்பிடத்தக்கது.