சத்தியசாயி பாபாவின் 91ஆவது அவதாரவிழா நாளை யாழ்ப்பாணத்தில்

326 0

downloadசத்தியசாயி பாபாவின் 91ஆவது அவதார தினவிழா நாளை யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளது.

யாழ்ப்பாணம் சேர்.பொன்.இராமநாதன் வீதி திருநெல்வேலியில் அமைந்துள்ள சத்தியசாயி பாபா நிலையத்தில் குறித்த விழா நடைபெறவுள்ளது.

காலை, மாலை நிகழ்வுகளாக நடைபெறவுள்ள அவதார நிகழ்வில் அஸ்தோத்திரம், திருநீற்றுப்பதிகம், காயத்திரி ஜெயம், நாம சங்கீர்த்தனம் ஆகியன இடம்பெறவுளள்ளது.

அதனைத் தொடர்ந்து பக்தி இசைக்குழுவினரின் இசை அர்ப்பணமும் நடைபெறவுள்ளது.

முற்பகல் 11 மணியளவில் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையின் கண் சத்திரசிகிச்சை நிபுணர் வைத்தியக் கலாநிதி முத்துசாமி மலரவனினால் சத்தியசாயி நிறுவனமும் அதன் சேவைகளும் எனும் தலைப்பில் சொற்பொழிவு ஒன்றும் இடம்பெறவுள்ளது.

மாலை நிகழ்வுகளாக சாயி இசைக் கலைஞர்களின் வாத்திய இசைச் சங்கமம், தெய்வத்தில் அன்பு என்னும் நாடகம் நடைபெறவுள்ளது.

மாலை 3.30 மணியளவில் நவீன காலத்தில் சாயி காட்டும் ஆன்மீகம் என்னம் தலைப்பில் இலங்கை சுகாதார அமைச்சின் தேசிய புற்றுநோய் கட்டுப்பாடு நிகழ்ச்சித்திட்ட அதிகாரி வைத்தியக் கலாநிதி சிவப்பிரகாசம் அனுஸ்யந்தன் சிறப்புரை ஆற்றவுள்ளார்.