ராமநாதபுரத்தில் விமானப்படை வீரர்கள் 35 பேர் உள்பட 90 பேருக்கு இன்று ஒரே நாளில் கொரோனா கண்டறியப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளியில் உள்ள ஐஎன்எஸ் பருந்து விமானப்படை தளத்தில் 41 வீரர்களுக்கு கொரோனா பரிசோதனை நடந்தது. இதில் 35 வீரர்களுக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
35 வீரர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதால் ஐஎன்எஸ் பருந்து கடற்படை தளம் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மூடப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் ராமநாதபுரம் மாவட்டத்தில் ஏற்கனவே 545 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியான நிலையில் இன்று ஒரே நாளில் 35 வீரர்கள் உள்பட 90 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 635-ஆக உயர்ந்துள்ளது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் இதுவரை 301 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 2 பேர் உயிரிழந்துள்ளனர்.

