மாமனிதர் ரவிராஜின் 58வது ஜனன தினம் சாவகச்சேரியில் அனுஷ்டிப்பு!

374 0

சுட்டுப்படுகொலை செய்யப்பட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாமனிதர் நடராஜா ரவிராஜின் 58வது ஜனன தினம் இன்று (25) அனுஷ்டிக்கப்பட்டது.

தென்மராட்சி பிரதேச செயலகத்திற்கு முன்பாக உள்ள அவரது சிலை முன்னால் இந்த ஜனனதினம் அனுஷ்டிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் ரவிராஜின் மனைவி சசிகலா ரவிராஜ் கலந்து கொண்டு கணவரின் சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.

அஞ்சலி நிகழ்வில் முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கள், உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.